News Breaking
Live
wb_sunny May, 6 2025

Breaking News

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிக மோசமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி தற்போது கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் தனது பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தற்போது குணமடைந்து வரும் நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சம்யுக்தா ஹெக்டே தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Newsletter Signup

"Nagercoil Mail" The Heart Beats of Kumari... Stay tuned with us... Subscribe our site for Latest news...

Post a Comment