News Breaking
Live
wb_sunny May, 8 2025

Breaking News

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிக் அரை இறுதிக்கு தகுதி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிக் அரை இறுதிக்கு தகுதி

இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் விளையாடினர்.
நடப்பு சாம்பியனான ஜோகோவிக் நேற்றைய ஆட்டத்தில் பெய்த மழையின் பொழுது, 6-4, 2-1 என்ற செட் கணக்கில் பின்தங்கி காணப்பட்டார். மழையால் ஆட்டம் இன்று தொடர்ந்தது.
இதில், அதிரடியாக விளையாடிய ஜோகோவிக் 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றியை கைப்பற்றினார். இந்த போட்டி ஏறக்குறைய 3 மணிநேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த வெற்றியால், இத்தாலி நாட்டின் லாரென்ஜோ சொனேகோவை அரை இறுதி போட்டியில் ஜோகோவிக் எதிர்கொள்கிறார்.

Tags

Newsletter Signup

"Nagercoil Mail" The Heart Beats of Kumari... Stay tuned with us... Subscribe our site for Latest news...

Post a Comment