News Breaking
Live
wb_sunny May, 30 2025

கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. மோகன் அய்யர், எட்டணி பகுதியில் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கப்பியறை பகுதியை சேர்ந்த பெல்பின் ராஜ் என்பது தெரியவந்தது.
பின்பு அவரை சோதனை செய்த போது அவர் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
உடனே அவரை பிடித்து, அவரிடமிருந்த 2.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். அவர் மீது காவல் ஆய்வாளர் திரு.தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Newsletter Signup

"Nagercoil Mail" The Heart Beats of Kumari... Stay tuned with us... Subscribe our site for Latest news...

Post a Comment