News Breaking
Live
wb_sunny May, 28 2025

கர்நாடகாவில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கர்நாடகாவில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கர்நாடகத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த 1-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்து இருந்தார்.
மாநிலத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அறிவித்து உள்ளார்.

Tags

Newsletter Signup

"Nagercoil Mail" The Heart Beats of Kumari... Stay tuned with us... Subscribe our site for Latest news...

Post a Comment